மாமல்லபுரம்

மாமல்ல புரத்தில் நான் இருந்தேன் - என்
மனதில் உன்னையே நினைந் திருந்தேன்
மங்காத கலைமேவும் அழகுச் சிற்பத்திலே - அங்கு
மங்கையே ஆடிய துந்தன் சிற்றிடையே

பல்லவர் வாழ்க்கையின் கலை ஆர்வம் - இன்று
பல்லோர் கண்டுதான் களிப் படைகின்றார்
பழ்ந்தமிழ் ஏட்டின் சுவை சேர்த்து - என்
பண்பட்ட மனதிலே உணர் ஊட்ட

கல்லும் கதைசொல்ல கற்பனை எனையல்ல - அன்பு
கற்கண்டு மொழியும் என்னை வெல்ல
காவியச் சுவையுட்ட காரிகை எனைவாட்ட - நம்
காதல் கதைஎண்ணி நெஞ்சம் தாலட்ட

ஆழியின் அலையும் அயர்ந்தே விளையாட - அங்கு
ஆதவன் ஒளியாலே வெள்ளலை மின்னவே
ஆறாத துயர்மாறி அமைதியும் துணைநாட - அன்று
ஆண்டவன் புகழ்பேசி இன்றால்வோரை நினைத்தே

அறியனை அமர்ந்தார் அறநிலை மறந்தார் - இன்று
அறியாத மூடராய் மக்களும் திகழ்ந்தார்
அவநிலை தீர்ந்தே வறிஞரும் தெளிந்தே - தூய
அறிஞரும் உயர்ந்தே எளிமையை திருத்திடவே

நெஞ்சம் இனிக்கும் அன்பு வளர்ந்தால் - என்
சஞ்சலம் தீர்ந்திடும் உன்னன்பு கிடைத்தால்
வஞ்சகம் அழகல்ல இணைந்தபின் பிரியாதே - உறக்கம்
மஞ்சம் அழைத்தாலும் உன்னினைவு வாட்டுதே

ஆக்கம்: மு.பசுபதி நாள்: 04-12-1966

Comments

Thiagarajan.E said…
Dear Mr.Ganga,
Nice to meet you.
Your blogs are veru superb.
Keep in touch.
With Reg,
E.Thiagarajan

Popular posts from this blog

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்

அந்த வசந்த அமெரிக்கா எங்கே போனது?

திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில்