Posts

Showing posts from January, 2019

திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில்

திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில் இளையராஜாவின் இன்னிசையில் வந்த திருவாசகத்தினை சமிபத்தில் YouTube' ல் கேட்க நேர்ந்தது.   அச்சப் பத்து என்ற 10 பாடல்களிலிருந்து 6 பாடல்களை புற்றின் வாழ் என்ற பாடல் துவங்கி கோணிலா வாளி என்ற பாடலில் முடித்து இருப்பார். பாடலும் அதன் பொருளும் அருகில் இருந்தால் கேட்பதற்கு மேலும் இரசனையுடன் இருக்கும் என்ற எண்ணத்தில் சில பல வலைகளில் பாடலையும் பொருளையும் தெரிந்து கொண்டு அதனைப் படிப்பதற்கு எளிமைப் படுத்தி கொடுத்து இருக்கிறேன். YouTube link 1: https://www.youtube.com/watch?v=7ybaAjdKa5s YouTube link 2: https://www.youtube.com/watch?v=-XuO4CR7fzI பாடலைப் பொருளுடன் கேட்டு விட்டு உங்களின் கருத்தினை பின்னுட்டத்தில் தெரிவிக்கவும். பாடல்: புற்றில் வாள் அரவும் அஞ்சேன் ; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன் ; கற்றை வார் சடை எம் அண்ணல் , கண் நுதல் , பாதம் நண்ணி , மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து , எம் பெம்மாற்கு அற்றிலாதவரைக் கண்டால் , அம்ம! நாம் அஞ்சுமாறே! பொருள்: புற்றில் வளைந்து இருக்கும் பாம்பைக் கண்டு அ